J.A. George / 2020 மார்ச் 23 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனை மீறி செயற்பட்ட 1589 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 362 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று (22) இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வீதியில் நடமாடியவர்களே அதிகளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடி மதுபானம் அருந்தியவர்கள், வாகனங்களில் வீதிகளில் சென்றவர்கள், மதுபானம் அருந்திவிட்டு வீதியில் முறையற்ற முறையில் நடமாடியவர்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக அந்தந்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago