2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

17 கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த 45 கைதிகளுள் தற்போது 28 கைதிகளே தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதுடன், 17 கைதிகள்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக பூஸா சிறைச்சாலை அலுவலகம் தெரிவித்துள்ளது.


குறித்த 17 கைதிகளுள் பொட்ட நௌபர், ஆமி சம்பத், கெவுமா ஆகியோரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை உண்ணாவிரதத்தால் திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஞ்சிபான இம்ரான் சிகிச்சைகளின் பின்னர், மீண்டும் சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் பொடி லெசி, வெலே சுதா, நிரோ, ஒஸ்டின் உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .