Freelancer / 2026 ஜனவரி 10 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் 2 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் செம்பியன் பற்று வடக்குப் பகுதியில் பயணித்த ஓட்டோ ஒன்று விசேட அதிரடிப்படையால் திடீர் சுற்றிவளைத்து மறிக்கப்பட்டது.
ஓட்டோவைச் சோதனை செய்தபோது அதிலிருந்து 2 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஓட்டோச் சாரதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் பிடிபட்ட கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். (a)
12 minute ago
16 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
55 minute ago