Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 24 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் வேகமாக காரை செலுத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதான வர்த்தகருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய, இரண்டுவருட கடூழிய சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர் 3 இலட்ச ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி கிரிபத்கொடை, சபுகஸ்கந்த வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்தகர், மதுபோதையில் வேகமாக காரை செலுத்தி சென்;று சைக்கிளில் பயணித்த மூவர் மீது மோதியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அவ்வீதியால் பயணித்த இன்னொருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வர்த்தகருக்கே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago