2025 மே 15, வியாழக்கிழமை

தேர்தலை கண்காணிக்க 25,050 பேர் தயார்

George   / 2015 ஜூன் 30 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளில், பெவ்ரல் மற்றும் ஃகபே ஆகிய அமைப்புகளின் ஊடாக சுமார் 25,050 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

15,050 கண்காணிப்பாளர்கள் பெவ்ரல் அமைப்பின் ஊடாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளதுடன் அதில் 50 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 10,000 பேர் ஃகபே அமைப்பின் ஊடாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேவையேற்படின் இந்த கண்காணிப்பு பணிகளில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தயாராக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்காணிப்பு பணிகள் ஜூலை மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • Abu Tuesday, 30 June 2015 08:10 AM

    ஜனாதிபதித் தோ்தலின்போது வட-கிழக்கில் நடந்த ஊழலைப் போல இன்னும் நடக்கவா கண்காணிப்பாளா்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .