2025 மே 15, வியாழக்கிழமை

ஜனாதிபதி நிராகரிப்பு; மஹிந்த இன்றிரவு இறுதி முடிவு

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் என அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ அல்லது சுதந்திரக் கட்சி அல்லாத வேறு கட்சியிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் இது தொடர்பில் மஹிந்தவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (02) இரவு இடம்பெறவுள்ள முக்கிய கூட்டமொன்றின் போது இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0

  • Mun pin Thursday, 02 July 2015 08:38 PM

    No comments all redy desired abv Dissition

    Reply : 0       0

    kaviyarasan Friday, 03 July 2015 02:58 PM

    Super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .