2025 மே 16, வெள்ளிக்கிழமை

'போர்ட் சிட்டி' வழக்கு: அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்குமாறு உத்தரவு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகரம் (போர்ட் சிட்டி) தொடர்பில், அமைச்சரவை இதுவரை எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (07), சட்ட மா அதிபருக்கு அறிவித்தது.

கொழும்பு துறைமுக நகரத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்திருந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட மற்றும் எச்.சி.ஜே.மடவல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிடர் ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர, 'மேற்படி கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் புதிய சுற்றுச்சூழல் அறிக்கையொன்றைத் தயாரித்து அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக' கூறினார்.

அத்துடன், இந்த அறிக்கையில் பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு இணைப்பதாக அவர் குறிப்பிட்டார். இவற்றைக் கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம், இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .