2025 மே 16, வெள்ளிக்கிழமை

நீதியானதும் சுயாதீனதுமானதொரு பொதுத்தேர்தலை மக்கள் சந்திக்கவுள்ளனர்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்காக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இம்முறை பொதுத்தேர்தலானது சுகந்திரமானதும் வன்முறையற்றதுமான சாதாரணமானதுதொரு தேர்தலாக நடைபெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கையின் பொருட்டு ஐரோப்பா சங்கம், பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வருகைதந்துள்ள குழுவினருடனான கூட்டம், ஜனாதிபதியின் காரியாலயத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் உட்பட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து அதிகாரிகளும் சுதந்திரமானதும் சுயாதீனதுமானதொரு தேர்தல் வாக்களிப்பினை நிகழ்த்துவதற்கு பங்களிப்பு செலுத்துமாறு ஜனாதிபதி கூறினார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வரை தேர்தல் முறையானது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது எனவும் தேர்தல் பிரசாரங்களின் பொருட்டு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் நடைபெறப் போகும் தேர்தல்களில் இவ்வாறான செயற்பாடுகளை நாட்டில் காண்பது அரிது எனவும் கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது எமது நாட்டு மக்கள் தாங்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபித்துக்காட்டி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .