2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனவர்களுக்கு 'இல்லாதவர்' அத்தாட்சிப்பத்திரம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போயுள்ளோக்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை உறவினர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில் 'இல்லாதவர்' எனும் அத்தாட்சிப பத்திரத்தை வழங்கும் அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.

மரணம் அடைந்தவர்களை பதியும் அதிகாரம் 1951 ஆண்டின் 17ஆம் இலக்க சட்ட ஒழுங்கின்படி பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், இயற்கை மரணமல்லாது வேறு காரணங்கள், பயங்கரவாத செயல்கள், கலவரம், இயற்கை அனர்த்தங்களால் மரணம் ஏற்பட்டு உடல்கள் கிடைக்காத போது இந்த திணைக்களத்துக்கு மரணத்தை பதிவு செய்யும் அதிகாரம் இல்லை. 

இதனால் இந்த பிரச்சினைக்குத் தீர்வாக 2010ஆண்டு 19 இலக்க சட்டம் (தற்காலிக ஒழுங்கு) கொண்டுவரப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .