2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

20 சீர்த்திருத்தங்களுடன் வரைவு சமர்ப்பிக்கப்படும்: ஜே.வி.பி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் ஆணையை மதிக்காமல் தற்போதைய அரசாங்கம் பயணித்துகொண்டிருக்கின்றது. இதனால் நாட்டுக்குள் மிக அவசரமாக முன்னெடுக்கவேண்டிய 20 சீர்த்திருத்தங்கள் அடங்கிய வரைவை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.வி) நடவடிக்கை எடுத்துள்ளது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குதல், கட்சி மாறுவதை தடைச்செய்தல், அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கு மட்டுப்படுத்தல், பிள்ளைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு, விவசாய அறுவடைக்கு நிர்ணயவிலையை பெற்றுக்கொடுத்தல், கலைஞர்களுக்கு கௌரவமான பாதுகாப்பளித்தல், தகவல் அறியும் உரிமை, இயற்கை வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட 20 சீர்த்திருத்தங்கள் அடங்கிய வரைவையே கையளிக்கப்படவுள்ளது என்றும் ஜே.வி.பி அறிவித்துள்ளது. 

சிவில் சமூக மற்றும் அறிவாளிகளின் கருத்துகளை பெற்று இந்த முன்மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

ஜனவரியில் பதவிக்கு வந்த பின்னர் புதிய அரசாங்கம் விரைவான சில மாற்றங்களை கொண்டு வந்தாலும் இப்போது வேறு பல முக்கிய சீர்திருத்தங்களின் அமுலாக்கம் மெதுவாகவே நடைபெறுவதாகவும் அவர் சாடியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .