2026 மே 02, சனிக்கிழமை

’2020இல் அரசாங்கத்தை உருவாக்குவோம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2020  ஆண்டு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரக அரங்கில் இன்று (03) இடம்பெற்றது.

இதன்போது, அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

அத்துடன், 2020 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை  அமைப்போம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களது பலத்தை காட்டத் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடைபெறாமல் இருப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிரதான காரணம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .