Editorial / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கடமையாற்றி வரும் சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை 2021ம் ஆண்டு கையூட்டலாக பெற்றுக் கொண்டதாக கூறப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டனர்.
நுவரெலியா மற்றும் கல்முனையில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் கல்முனை நற்பட்டி முனை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது வீட்டில் இருந்து பணிக்கு வந்து செல்வதற்காக மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
இதற்கமைய கடந்த 2021ம் ஆண்டு களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அணுகியபோது அவர் அதற்கான பரிந்துரைகளை செய்து தருவதாகக் கூறி, அவரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் கைபேசி உள்ளிட்ட பொருட்களும், 72,000 ரூபாய் பணத்தையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஆகிய இருவரும் இலஞ்சமாக கோரி பெற்றுள்ளனர்
இதையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடந்த வருடம் இடமாற்றம் பெற்று நுவரெலியாவுக்கு சென்றுள்ளதுடன் பெண் பொலிஸ் சார்ஜன்ட் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்
இந்த நிலையில் இந்த இலஞ்சம் வாங்கியது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தற்போது நுவரெலியாவில் கடமையாற்றிவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திங்கட்கிழமை (05)காலை 10.50 மணியளவில் அங்கு வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கல்முனை பொலிஸ் உதவி அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றி வரும் பெண் சார்ஜன்ட் பிற்பகல் 3.00 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் முறையே நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago