Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கர்தினால், “விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் அவ்வப்போது எங்களுக்குத் தெரிவிக்கிறது” என்றார்.
“அரசு படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிகிறது. விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அவர்கள் எங்களுடன் நடத்திய உரையாடல்களிலிருந்து இது தெளிவாகிறது, ”என்று அவர் வலியுறுத்தினார்.
"எனவே, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பதவியேற்றவுடன், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்தார், அங்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
46 minute ago