2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29  இந்திய  மீனவர்களையும் எதிர்வரும் 29ஆம்  திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 29  இந்திய மீனவர்களின் வழக்கு நேற்று (15)ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கடந்த 9ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 17 இந்திய மீனவர்கள் இலங்கைக்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள்  ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று  முற்படுத்தப்பட்டிருந்தனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .