Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
4ஆம் திகதி நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் இந்த மாதம் 15ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபைகளின் கீழ் இந்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதில் 6976 ஆசிரியர்கள் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய,
சுசமயவர்தன வித்தியாலயம்- பொரளை,
யசோதரா பெண்கள் பாடசாலை- கொழும்பு-08,
புவனேகுபாடு மகா வித்தியாலயம்- மஹரகம,
புனித மரியாள் மகா வித்தியாலயம்- அவிஸாவளை,
பொத்துபிட்டிய மகா வித்தியாலயம்- வாதுவ,
ஸ்ரீபால மகா வித்தியாலயம்- ஹொரன,
கோதமி கனிஷ்ட வித்தியாலயம்- கம்பஹா,
நிவ்ஸ்டட் பெண்கள் பாடசாலை- நீர்கொழும்பு,
பர்கியுசன் பாடசாலை- இரத்தினபுரி,
ஜனாதிபதி வித்தியாலயம்- எம்பிலிப்பிட்டிய,
சென்.ஜோசப் மகா வித்தியாலயம்- பண்டாரவளை,
ஊவா மகா வித்தியாலயம்- பதுளை,
மஹியங்கனை தேசிய பாடசாலை,
அநுலாதேவி பெண்கள் பாடசாலை- காலி,
ஜிந்தொட்டை மத்திய மகா வித்தியாலயம்- காலி,
ஜனாதிபதி வித்தியாலயம்- மாத்தறை,
சாஹிரா வித்தியாலயம்- கல்முனை,
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்,
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்,
வேம்படி பெண்கள் பாடசாலை,
வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்,
ஆனைப்பந்தி இந்து பெண்கள் பாடசாலை- மட்டக்களப்பு,
விக்னேஸ்வரன் மகா வித்தியாலயம்- திருகோணமலை,
ரோயல் தேசிய பாடசாலை- மொனராகலை,
ஹைலண்ட்ஸ் கல்லூரி- ஹட்டன்,
புனித தோமஸ் தேசிய பாடசாலை- மாத்தளை,
வாரியபொல ஸ்ரீ சுமங்கல வித்தியாலயம்- கண்டி,
புனித மரியாள் கல்லூரி- கேகாலை,
ரணபிம வித்தியாலயம்- கன்னொருவ,
பேராதனை, தம்புளை மகா வித்தியாலயம்,
ரோயல் மத்திய மகா வித்தியாலயம்- பொலன்னறுவை,
டி.எஸ். சேனநாயக்க ஆரம்ப பாடசாலை- அநுராதபுரம்,
கார்மேல் பெண்கள் பாடசாலை- சிலாபம்,
மஹாசென் வித்தியாலயம்- நிக்கவரெட்டிய,
குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயம்,
மலியதேவா மகா வித்தியாலயம்- குருநாகல்,
ஸ்ரீ சுமேத மகா வித்தியாலயம்- மாலிபட,
நெடோல்பிட்டிய கெமுனு மகா வித்தியாலயம்- தங்காலை,
பந்துல சேனாதீர மகா வித்தியாலயம்- கரந்தெனிய
ஆகிய பாடசாலைகளிலேயே பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago