Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, பட்டபொத்த மற்றும் காலி, அஹுங்கல்ல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா, பட்டபொத்தவில் இன்று பிற்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரில் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் என்றும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காலி, அஹுங்கல்ல, கட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட இன்னொரு துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
22 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago