2025 ஜூலை 05, சனிக்கிழமை

4 பாடசாலைகள் 17 வரை மூடப்படும்

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஆம் வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு இசிபத்தனா, மாத்தறை மஹானாம, குருநாகல் சீ.டயிள்யு.டயிள்யு கன்னங்கர மற்றும் கண்டி புனித மரியாள் கல்லூரி ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

அத்துடன்,  மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெற்றுவரும் 22 பாடசாலைகளில் ,சில பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .