Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 01 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டின் (2025) முதல் நான்கு மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 1,726 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில், 1,352 புகார்கள் புகார் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 200 புகார்கள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.
போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், இலஞ்சச் சட்டத்திற்குப் பொருத்தமற்றதாலும் 450 புகார்கள் விசாரிக்கப்படாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளன.
சுமார் 234 புகார்கள் பிற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன,
மேலும் 147 புகார்கள் அறிக்கைகளைப் பதிவு செய்ய புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அறிக்கைகள் மற்றும் பிற கூடுதல் விடயங்களுக்காக 321 புகார்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.
இந்தக் காலகட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் சுமார் 33 வழக்குகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தாக்கல் செய்துள்ளது.
இதில் இலஞ்சம் தொடர்பான 24 வழக்குகள், ஊழல் தொடர்பான 07 வழக்குகள் மற்றும் நிதி மோசடி தொடர்பான 02 வழக்குகள் அடங்கும் என கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago
17 Jun 2025