2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

51 வயதான பெண் துஷ்பிரயோகம் செய்து படுகொலை

Editorial   / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் தனிமையில் இருந்த 51 வயதான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அப்பெண்ணை படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அந்தப் பெண் தனது தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். தாய் அருகில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபரொருவர் வீட்டுக்கு வந்து, குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்துள்ளார்.

சந்தேகநபரான  47 வயதுடைய   நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .