Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாள்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.
நாடாளுமன்றம் குறிப்பிட்டவகையில் அன்றைய தினம் கலைக்கப்பட்டால் மேலும் 110 நாட்களில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.
மாத்தறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago