2025 ஜூன் 26, வியாழக்கிழமை

574 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார், தலை மன்னார் கடற்கரை பகுதிகளில், நேற்று (23) மாலை கடற்படையினர் மேற்கொண்ட விசேட  கண்காணிப்பு நடவடிக்கைகளின்  போது, 574.5 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளனர்.

கடற்படையினர் நடுக்குடா, சௌத்பார், ஓலைத் தொடுவாய் மன்னார், தலைமன்னார் ஆகிய கடற்கரை பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய 10 மூடைகளை மீட்டதோடு, குறித்த மூடைகளில் சுமார் 574.5 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலைகள் யாழ் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .