2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

68,000 இலங்கையர்கள் காத்திருக்கின்றனர்

R.Maheshwary   / 2021 ஜனவரி 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 68,000 இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்காக காத்திருப்பதாக,இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மோசமான உலகளாவிய நிலையின் கீழ், தற்போது நிலவும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும் செயன்முறையானது, அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டல்களின் பேரில் வெளிநாட்டு அமைச்சின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 பெப்ரவரி மாதத்தில் வுஹான் நகரத்திலிருந்து 33 மாணவர்களை நாட்டுக்கு மீள அழைத்து வந்ததிலிருந்து இன்றுவரை 60,470 இலங்கையர்கள், 137 நாடுகளில் இருந்து வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலமாக அமைச்சு நாட்டுக்க மீள அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .