2024 மே 09, வியாழக்கிழமை

பாரியளவு போதைப்பொருட்கள் சிக்கின

Freelancer   / 2024 ஏப்ரல் 27 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 கிலோ 81 கிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 527 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போமிரிய கடுவலை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபர் பண்டாரவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர் வாழ்ந்த வீடு மற்றும் காரினை சோதனை செய்தபோதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X