2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘9 பேர் கைது’

Editorial   / 2019 மே 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்பகுதியில்  சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் ஒன்பது பேர் நேற்று (30), கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபர்கள் 38, 37, 26, 35, 23, 32, 30, 29 மற்றும் 36 வயதுகளையுடையவர்களாவார். மேலும் இவர்கள் திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர்களிடமிருந்து 50 கிலோகிராம் அளவிலான மீன்களும், இயந்திர பட​கொன்றும், 250 மீற்றர் நீளமான மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .