Simrith / 2025 நவம்பர் 04 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை LGBTQ உரிமை ஆர்வலர் சானு நிமேஷா, LGBTQ சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய சானு நிமேஷா, LGBTQ சமூகத்திற்கு எதிராக ஊடகங்கள் மூலம் கடுமையான வெறுப்புப் பேச்சு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"அவர்களிடம் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால், அவர்கள் இப்போது LGBTQ சமூகத்தைப் பிடித்துக்கொண்டு, சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள், LGBTQ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிய வேண்டிய அவசியமில்லை," என்று சானு நிமேஷா கூறினார்.
அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத் தேவையில்லை; அவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையை வாழட்டும் என்று சானு நிமேஷா மேலும் கூறினார்.
"LGBTQ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களுக்கு அரசியல் பிரச்சினை இருந்தால், அதை வேறு வழியில் தீர்க்க வேண்டும்," என்று சானு நிமேஷா மேலும் கூறினார்
9 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
30 minute ago