2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

PHI அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூலை 22 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் இன்று (22) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனவும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவுக்கும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினருக்கும் இடையில் நேற்றைய தினம் (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

பொது சுகாதார பரிசோதகர்கள், கடந்த ​வௌ்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .