2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று - கொழும்பு பஸ் விபத்து: பலர் காயம்

Freelancer   / 2024 மார்ச் 30 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது 

இந்த விபத்தில் சிக்கி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சில வர்த்தக நிலையங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4 ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X