2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

’அக்கரைப்பற்று பஸ் அம்பலத்தில் புரண்டது’

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

 

அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை பிரதேசத்திலிருந்து தர்காந​கரை நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று, மாவனெல்ல, பஹல கடுகண்ணாவை அம்பலம் பிரதேசத்தில், நடுவீதியிலேயே புரண்டு விபத்துக்குள்ளானது.

நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். காயமடைந்த 35 பேர், கண்டி, பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் நடத்துநரான, அம்பாறை - பாலமுனை-04, ஹுசைனியா நகரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் எம்.சி.முஹம்மட் சாபீர் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். பஸ்ஸின் சாரதி உட்பட, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை பிரதேசத்திலுள்ள ஆசிரிய கலாசாலையில் பயிலும் மாணவ, மாணவிகள் 33 பேரே காயமடைந்துள்ளனர்.

பஸ் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையால், பஸ், வீதியின் நடுவிலேயே புரண்டு விபத்துக்குள்ளாகிவிட்டதென, மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில், பஸ்ஸில் 54 பேர் இருந்துள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் 22 - 23 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அதில் நால்வர் மாணவர்கள் என்றும், ஏனையோர் மாணவிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று நாள்கள் கொண்ட கல்விச் சுற்றுலாவுக்காக, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுநர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார ஊழியர்கள் என 212 பேர் அடங்கிய குழுவினர், நான்கு பஸ்களில் தங்களுடைய பயணத்தை,  அட்டாளைச்சேனையிலிருந்து நேற்று முன்தினம் (05) காலை ஆரம்பித்தனர்.

அக்குழுவினர், மட்டக்களப்பு, சீகிரிய, கொழும்பு, இரத்மலானை, விக்டோரியா, தர்காநகர் ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X