Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதேச செயலாளர் இந்திக குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன், கண்டி-அக்குறணை பகுதியில் சகல வீதிகளிலும்; பாதுகாப்பு தரப்பினர் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.
அக்குறணை -தெலப்புகஹவத்த பிரதேசத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நேற்று (31) அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் குறித்த தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்தே, தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .