2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

’அசாத் சாலியை நிச்சயமாக கைது செய்ய வேண்டும்’

Nirosh   / 2021 மார்ச் 13 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, அசாத் சாலி மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அசாத் சாலியை நிச்சியமாகக் கைது செய்ய வேண்டும். அவர் மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படைவாதமே பின்னர் பயங்கரவாதமாக உருவாகிறது. ஷரீயா சட்டத்தின் செயற்பட வேண்டுமென்றால் அவர் சவுதி அரேபியாவுக்கே செல்ல வேண்டும். இலங்கையில் இருக்க வேண்டுமென்றால், இலங்கையின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டே வாழ வேண்டும். 

இலங்கையிலிருந்துக் கொண்டு ஷரீயா பற்றி பேச முடியாது. எனவே அவரைக் கைது செய்து, அவருக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அசாத் சாலி தொடர்பில் சிஐடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .