2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’அச்சமின்றி வாழ்வதற்கு மொட்டுக்கு வாக்களியுங்கள்’

Editorial   / 2020 ஜூலை 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து இன மக்களும் பயம் சந்தேகமின்றி வாழ கூடிய உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கு தாமரை மொட்டுக்கு வாக்களிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி பாததும்பர பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் பெறுவதற்கான சக்தி கொண்ட ஒரே கட்சி மொட்டு கட்சியாகும். இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அதிகமானோர் மொட்டு கட்சியுடன் இணைந்துள்ளனர் என பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்.பிரேமதாஸ யுகத்துக்கு மீண்டும் பயணிப்பதற்கு இலங்கை மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை. 88, 89 ஆம் ஆண்டு கலவரம் போன்ற யுகம் ஒன்று இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் அவசியமில்லை. 

கொரோனா தொற்றினை தோல்வியடைய செய்யும் நோக்கில் நிதி சட்டமூலம் கொண்டுவர முயற்சித்த போது சஜித் பிரேமதாஸ அந்த நிதி சட்டத்தை தோல்வியடைய செய்வதாக அறிவித்ததன் மூலம் அவரது முதிர்ச்சியற்ற அரசியல் பார்வையே உள்ளதென்பது தெளிவாகியுள்ளது.

அவ்வாறான பார்வையற்ற நபர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்வதற்குட்படுத்துவதற்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க அனைத்து இனத்தவரும் கட்டியெழுப்ப கூடிய நாட்டினை உருவாக்குவதற்காக தங்கள் பொன்னான வாக்கினை பயன்படுத்துமாறு பிரதமர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .