2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

Editorial   / 2025 மே 08 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வேன் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீதே குறித்த வேன் மோதியுள்ளது.

குறித்த வேனில் பயணித்த குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த அனைவரும் '1990 சுவசெரிய' அம்பியூலன்ஸ் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X