2026 மே 14, வியாழக்கிழமை

dd

’அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பில்லை’

Editorial   / 2020 மார்ச் 20 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்கு சட்டம் இடையூறாக அமையாது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தனிநபர் பாதுகாப்புக் சேவைகள் , துறைமுகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் ஆகிய சேவைகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

அத்தியாவசிய தேவைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான அறிக்கை, இன்று பிற்பகல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .