Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 20 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக தமது பெறுமதியான ஆவணங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவ விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 04 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களில் பலர் தமது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, திருமண சான்றிதல், சாரதி அனுமதி அட்டை மற்றும் கல்விச் சான்றிதல்கள் உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்களை இழந்துள்ளனர்.
குறித்த மக்களுக்கு உரிய ஆவணங்களை மீள பெற்றுக்கொடுக்கும் வகையிலே அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago