2024 மே 10, வெள்ளிக்கிழமை

அனுரவுக்கு அமோக வரவேற்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் சந்திப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  சுவீடனுக்கு சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

கடந்த 25 ஆம் திகதி அனுரகுமார திசாநாயக்க சுவீடன் நோக்கி பயணமானார். சுவீடனில் உள்ள இலங்கையர்களால் சுவீடன் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் ஸ்வீடன் வௌிநாட்டு குழுவினரால் ஸ்டொக்ஹோல்ம் நகரில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

அனுரகுமார திசாசாயக்க ஸ்வீடனில் தங்கியிருக்கும் காலத்தில் பல பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கலந்துரையாடல்களில்  பங்கேற்பார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .