2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சரவையில் மூவர் குறித்து தீர்க்கமான முடிவு

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (18) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் மூவர் குறித்து, முக்கியமாகக் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (17) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு ஆதரவளிக்கும் முகமாக, அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஸிம், ரிஷாட் பதியூதீன், அப்துல் ஹலீம் ஆகியோர், கடந்த 3ஆம் திகதியன்று, தத்ததமது பதவிகளை இராஜினாமா செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .