2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரை நிர்வாணமாக நடந்த பெண் கைது

Janu   / 2025 ஜூலை 15 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ்  நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பீச் ஹட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என பொத்துவில் பொலிஸ் நிலைய  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்று அந்தப் பெண்ணைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

மேலும்  குறித்த  பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .