2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அரங்கம் காணும் ஹைக்கூ கவியமர்வு

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியினர் மாதாந்தம்  நடத்தும்  ஹைக்கூ  கவியரங்கின் நான்காவது  அமர்வு சர்வதேச  சமாதான  தினமாகிய 21.09.2025 அன்று மாலை 4 மணிக்கு  நடைபெறவுள்ளது.

கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச  பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வித்தியாசமான  அம்சங்களும் இடம் பெறவுள்ளன.

சுயாதீன ஊடகவியலாளரும் கவிதாயினியுமாகிய திருமதி மேரி ஸ்ரேலா  இந்த  அமர்வுக்கு தலைமை  ஏற்கிறார்.

முற்றிலும் இளங்கலைஞர்கள் ஒன்றிணைந்து  உருவாக்கி -வெகு விரைவில் திரையிடப் படவுள்ள "சனாதனனின் மெளனமொழி " என்ற முழுநீளத் திரைப்படக்  கலைஞர்கள் பங்கேற்கும் முன்னோட்ட நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

 இந்த  நிகழ்வில் கலந்துகொண்டு ஹைக்கூ  கவிபாட விரும்பும் ஆர்வலர்கள்  உடன் 075 4880172  என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .