2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அரசாங்கத்தை வெளியேற்ற ரணில் ஒத்துழைக்க வேண்டும்’

Nirosh   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருவதால், ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்த ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவே தொடர்ந்தும் செயற்படுவார். சஜித்தை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது அவர் எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்கிற நிலைப்பாட்டிலோ ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் இல்லை என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருவதால், எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை வெளியேற்ற ரணில் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

ரணிலுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைவார்களெனத் தெரிவிக்கப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. ரணிலுடன் இருக்கும் டீல் காரர்களே இவ்வாறானப் பொய்களைக் கூறி வருகிறார்கள்.

ரணிலுடன் இருப்பவர்கள், அரசியல் என்றால் 'டீல்' செய்வதென நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரணிலின் தற்போதைய நிலைக்கு இந்த 'டீல்' காரர்களே காரணம். இதனை ரணில் புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .