2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரசியலமைப்பு பேரவை 12ஆம் திகதி கூடவுள்ளது

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.   

இதன்போது, உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.  

எனினும், அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இந்த நிலையில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச,  நாடாளுமன்றின் அங்கீகாரம் இல்லாது 12ஆம் திகதி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .