2025 ஜூன் 25, புதன்கிழமை

அறிக்கையை கையளிப்பதில் தாமதம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, இம்மாதம் 23ஆம் திகதி இறுதி அறிக்கையை பெற்றுக்கொடுப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும், இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவையென்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பான யோசனையை சபாநாயரிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .