2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஆடை தொழிற்சாலையில் தீ

J.A. George   / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல் தளங்களுக்கும் பரவியதுடன், மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்படுத்த களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X