2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘ஆணைக்குழுவை அ​மைக்க ஜனாதிபதி இணக்கம்’

Editorial   / 2019 ஜனவரி 13 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 4 வருடங்களாக சுகாதார அமைச்சுக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளாரென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் ஜனாதிபதி நேற்று இரவு முன்னெடுத்து கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இது குறித்து அறிவித்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .