2025 ஜூன் 18, புதன்கிழமை

ஆர்மி சம்பத் தொடர்பான கோப்புகள் மாயம்

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கிராண்பாஸ் பொலிஸ் நிலையத்திலிருந்த கூட்டு வன்முறையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான தகவல் அடங்கிள 50 கோப்புகள் மாயமாகியுள்ளனவெ தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, வழக்கு தொடரப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகள் காணப்பட்ட கோப்புக்களிலிருந்து பக்கங்கள் கிழித்து எடுக்கப்பட்டுள்ளனவெனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும், ஆரம் சம்பத் உள்ளிட்ட பாதாள குழுக்களின் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஆவணங்களே இவ்வாறு மாயமாகியுள்ளன என மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஆர்மி சம்பத்த தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அவசியமான 'பி' அறிக்கைகளே இவ்வாறு மாயமாகியுள்ளனவெனவும்,   இந்த வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாக இடம்பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் 2011 ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களே கிராண்பாஸ் பொலிஸ் நிலையத்திலிருந்து மாயமாகியுள்ளன எனவும் கூறப்படுகிறது. 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .