2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆளும் கட்சி எம்.பிக்களுக்கு விசேட விருந்து

Editorial   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான முக்கியமான சந்திப்பொன்று இன்று (02) பகல் இடம்பெறவிருக்கின்றது.

அலரிமாளிகையில் இடம்பெறவிருக்கும் இந்த சந்திப்பில், விசேட பகல்போஷண விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ​கிடைத்துள்ளன.

பாராளுமன்றத்தில் நிறை​வேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு ஆளும் தரப்பைச் சேர்ந்த பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்​கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலம், பாராளுமன்றத்தில் எதிர்வரும் 6ஆம் திகதியன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .