Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது பிற்போக்குத்தனமான அரசியற் கட்சியென விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா, நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட் ஹோட்டலில், நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கோரியிருக்கிறது என்றும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில், அரசமைப்பின் 13ஆவது, 19ஆவது திருத்தச்சட்டங்கயும் நாட்டிலுள்ள சுயாதீனக் குழுக்களையும் இல்லாதொழிக்கப்போவதாகப் பிரசாரம் செய்து வருகிறது என்றார்.
19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்திருக்கின்றபோதிலும், நாட்டில் தற்போது நாடாளுமன்றம் இல்லை என்பதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாகவும் சர்வாதிகாரமாகவும் நடந்துக்கொள்கிறார் எனவும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு புராதானச் சின்னங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி என்பது முற்றுமுழுதாக இனவாத நோக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாடெனவும், வடக்கு கிழக்கு மாத்திரமன்றி முழுநாடும் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாகவும் குற்றஞ்சுமத்தினார்.
“நாட்டில் முற்றுமுழுதாக அழிந்து வரும் ஜனாநாயகத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முற்போக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கிறதா என கேள்வி எழுப்பிய அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். ஆனால் ஜனாதிபதியால் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுத்தர முடியாதெனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக விரோதச் சக்திகளின் வெற்றியைத் தடுப்பதற்கு, ஒப்பீட்டளவில் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கும் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago