Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனன வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழை பெய்யக்கூடும். மேலும், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று காலை பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் காணப்படலாம்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago