2025 ஜூலை 16, புதன்கிழமை

இடையூறு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்கும் நோக்கில் அரச துறையினர் பாரிய அர்ப்பணிப்புடன் சேவைகளை ஆற்றி வருகின்றனர். 
இந்நிலையில் அவர்களின் கடமைகள் குறித்து குறைகூறி இடையூறு விளைவித்தல், அச்சுறுத்தல் விடுத்தல், தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் ஆகிய செயற்பாடுகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அவர்களை  கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தமாறு, சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X