2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘இந்திய விமானங்களை நிறுத்தத் தீர்மானமில்லை’

Editorial   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கொவிட்-19 மாறி தொடர்பிலான அச்சத்தில்,இந்தியாவிலிருந்து விமானங்களை இடைநிறுத்தும் எந்தவிதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 மாறி கண்டுபிடிக்கப்பட்டதான அறிக்கைகளுக்கு மத்தியில், இந்தியா, சிங்கப்பூரிலிருந்து விமானங்களை இடைநிறுத்தும் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்பு தேசிய நடவடிகைகள் நிலையத்தின் தலைவர் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் புதிய மாறி வந்திருக்கும் என்றும், இந்தியா, சிங்கப்பூரிலிருந்து அது வரவில்லை எனவும் தற்போது பலர் தொற்றுக்குள்ளாகவில்லை என ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, சிங்கப்பூரிலிருந்து குறைந்தளவு விமானங்களே வருவதாக ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்கால நடவடிக்கைகளைப் பொறுத்து தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென்றும் தேவைப்பட்டால் நிறைவேற்றப்படும் என ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து கடந்த மாதம் விமானங்களைத் தடை செய்திருந்த அரசாங்கம், பிரித்தானியாவிலிருந்து பயணிகள் இலங்கையில் மாறுவதை அந்நாடு புதிய கொவிட்-19 மாறி கண்டுபிடித்ததாகத் தெரிவித்ததையடுத்து நிறுத்திருந்தது.

இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஆறு பேர் குறித்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தவிர, சிங்கப்பூரிலும் புதிய மாறியில் தொற்றுடைய நோயாளர்களை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்காகத் தனது எல்லைகளை  இலங்கை, நேற்று முன்தினம் (28) முதல்  திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .