Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
தேசிய கல்வி நிர்வாகக் கொள்கைக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் இன ரீதியாக வலயக் கல்வி அலுவலகங்களும் கோட்டக் கல்வி அலுவலகங்களும் உருவாக்கப்பட்டுள்ளமை இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் செயற்பாடாகுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (07) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்; “நாட்டில் பிரதேச செயலகம் ஒன்றுக்கு ஒரு கோட்டக் கல்வி அலுவலகம் என்பது கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிர்வாக கொள்கையாகும். இதை மீறி, நாட்டில் வேறு மாகாணங்களில் கோட்டக் கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்படவில்லை.
“ஆனால், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் தேசியக் கல்வி நிர்வாகக் கொள்கைக்கு முரணான வகையில், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரிவு என்ற ரீதியில் கோட்டக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
“குறிப்பாக, கிண்ணியா கல்வி வலயத்தில் குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்வி அலுவலகங்களும் திருகோணமலை கல்வி வலயத்தில் புல்மோட்டை கோட்டமும் மூதூர் வலயத்தில் தோப்பூர் கோட்டமும் திருக்கோவில் வலயத்தில் பொத்துவில் தமிழ் பிரிவு கோட்டமும் தனிக் கோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
“இக்கல்விக் கோட்டங்கள் என்ன அடிப்படையில் எவரது அனுமதியின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது என்பது பற்றி கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
“அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமிழ் கல்வி வலயம், முஸ்லிம் கல்வி வலயம் என்ற ரீதியில் இனங்களுக்கென தனித்தனியாக மட்டக்களப்பு மத்தி, திருக்கோவில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
“கல்வியூடான சமாதானம், சகவாழ்வு, இன சௌஜன்யம் என்பன இவ்வாறான கல்வி வலயங்கள் மற்றும் கோட்டங்கள் மூலம் பாதிக்கப்படுகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
2 hours ago